பெரியாரின் ஆத்மா ஈவிகேஎஸ் இளங்கோவனை மன்னிக்காது என்று அதிமுக எம்பி தம்பிதுரை பேசியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர் “சமூக சீர்திருத்தம்தான் முக்கியம் என்று தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றவர் பெரியார். சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டும், பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என நினைத்த பெரியார் என்றும் தேர்தலை சந்தித்தத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவரது பேரன் இளங்கோவன் ஏற்கனவே அமைச்சராக இருந்து தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் அவரது ஆத்மா இளங்கோவனை மன்னிக்காது என்று கூறியுள்ளார். பா.ஜ.க எங்களுக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்பதில் உண்மை இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்று பாஜகவுடன் தான் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம்” என்று அதிமுக எம்பி தம்பிதுரை பேசியுள்ளார்.