தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. இவர் கடலூரில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த கடை திறப்பு விழா முடிவடைந்த பிறகு தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் அடுத்த எம்எல்ஏ என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதை திமுக மற்றும் அதிமுக உட்பட எந்த கட்சிகளும் மறுக்க முடியாது. மனித உழைப்பு முழுவதும் ஈரோட்டில் கொட்டி கிடக்கிறது. மற்ற 233 குழந்தைகளும் தாய் இல்லாத பிள்ளையாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்