விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அணையில் இருந்து குழாய் மூலமாக சிவகாசிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி செல்லும் மெயின் ரோட்டின் அடி பாகத்தில் இருக்கும் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மக்கள் கோரிக்கையின் அடிப்படையில், சாலையில் இருந்து 5 அடி தொலைவில் 12 கிலோமீட்டர் தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

தற்போது 4 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் ஆறாக ஓடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.