
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப் படிவங்கள் வழங்கப்பட்டு 1.63 கோடி பேர் பதிவு செய்தனர். இதில் அரசு விதித்த விதிகளின்படி, 1.15 கோடி பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற அரசு, தற்போது நியாயவிலை கடைகளில் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தனி குடும்ப அட்டை வாங்குவதற்கு மக்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.