தமிழில் ரஜினியுடன் கபாலி திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். இதனிடையே ராதிகா ஆப்தே பேட்டியில் கூறியிருப்பதாவது “சமூகத்தில் ஆண்களுக்கு சமமாக வேலை செய்து சம்பாதித்தாலும் வீட்டு வேலைகளை முழுமையாக நாம் தான் செய்யவேண்டும் எனும் மனநிலையில் இருக்கும் பெண்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். எங்களது வீட்டிலேயே சிறுவயது முதல் இதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அம்மா, அப்பாவிற்கு சொந்த மருத்துவமனை இருக்கிறது. என் அம்மாவும் அப்பாவிற்கு சமமாக மருத்துவமனையில் பணியாற்றுகிறார். வீட்டுக்கு வந்ததும் அம்மா குடும்பத் தலைவியாக மாறி விடுகிறார். வீட்டு வேலையை அனைவரும் பகிர்ந்துகொண்டால் ஒருவர் மீதே பாரம் இருக்காது. நல்ல குடும்ப தலைவி என பெயர் வாங்க பெண்கள் தியாகங்கள் செய்யவேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.