தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய்பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய்பல்லவி அதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். மருத்துவ படிப்பு படித்துள்ள சாய் பல்லவி சமீபத்திய பேட்டியில் நடிகர் சிம்ரன் குறித்து பேசியுள்ளார்.

அதாவது நடிகை சாய் பல்லவி இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சிம்ரனின் ஒரு படத்தை பார்த்துள்ளார். அந்த படத்தை பார்த்த பிறகு சிம்ரன் போல ஒரு நடிகையாக மாற வேண்டும் என ஆசைப்பட்டதாக சாய்பல்லவி தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவியின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்து போன சிம்ரன் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.