நாடு முழுவதும் எரிபொருள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2023-ம் நிதியாண்டில் நாட்டில் பெட்ரோல் நுகர்வின் அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக பெட்ரோலிய துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1998 முதல் இப்போது வரை இருக்கும் தரவுகளை வைத்து பார்க்கும் போது பெட்ரோலின் நுகர்வு 13.37 சதவீதம் அதிகரித்து 34.97 மில்லியன் டன்னாகாவும், டீசலின் நுகர்வு 12 சதவீதம் அதிகரித்து 85.89 மில்லியன் டன்னாக இருக்கிறது. மேலும் ஜெட் எரிபொருள் நுகர்வு 47 சதவீத வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.