துணிவு படம் பார்க்க அழைத்துச் செல்லவில்லை என 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பள்ளி மண்டபம் சாலையில் வசித்து வருபவர் சுரேஷ். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இவரின் ஒரு மகள் துணிவு திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லும்படி அடம்பிடித்துள்ளார். ஆனால் மாணவியின் தந்தை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நேரம் என்பதால் அழைத்துச் செல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் மாணவியை விட்டுவிட்டு தந்தை மற்றொரு மகள் மற்றும் மனைவியுடன் துணிவு திரைப்படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவரது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை மாணவியின் பெற்றோர் இணையத்தில் பகிர்ந்து வருந்தியுள்ளனர்.