தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9 வகுப்புக்கு ஏப்ரல் 10- 28ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

29ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல், கோடை வெயில் போன்ற காரணங்களால் 1 -5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் என புதிய கோரிக்கை எழுந்துள்ளது.