ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார்.

அங்கு ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப் படத்தில் இடம்பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தம்பதியினரை சந்திக்க வரும் அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.