பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 22 மாவட்டங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளானர். பாகிஸ்தானின் கடுமையான மின்வெட்டின் காரணமாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து எரிசக்தி துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், பவர் கிரிட்டில் காலை ஏற்பட்ட அலைவரிசை சரிவுனாலேயே பரவலாக மின்தடை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் பல பகுதிகளில் பரவலாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் மட்டும் 117 பவர் கிரிட்டுகள் மின்வினியோகம் இல்லாமல் முடங்கியுள்ளது.