பள்ளி வளாகத்தில் பாலியல் பலாகாரத்துக்கு உள்ளான 5 வயது குழந்தையின் கல்விக்கு உதவ மும்பை காவல்துறையினர் முன்வந்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, 15 வயது சிறுவனால் 5 வயது குழந்தை பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானது. இது தொடர்பாக தகவலறிந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தை மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளதை அறிந்த காவல்துறையினர், நிதி திரட்டி ரூபாய்.1.11 லட்சத்தை வங்கியில் செலுத்தி இருக்கிறார்கள். இப்பணத்தைக் கொண்டு அந்த குழந்தை 10ம் வகுப்பு வரை எந்த சிக்கலும் இன்றி கல்வி கற்க உதவும். அதோடு குழந்தையை நல்ல பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது