பெண்கள் உரிய வயதில் திருமணம் செயதுகொள்ள வேண்டும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும் இதுவரை மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குவகாத்தியில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்கேற்று பேசியதாவது, பெண்கள் சரியான வயதில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

அப்போது தான் தாய்மை அடைவதில் எந்த சிக்கலும் இருக்காது. ஒரு பெண் தாய்மையடைய 22 -30 வயது வரை சரியான காலமாக இருக்கும். பெண்கள் திருமணத்துக்கு பின் தாய்மையடைய நீண்ட நாட்கள் காத்திருக்கக்கூடாது. அது பிரச்னைகளை ஏற்படுத்தும். ஒவ்வொன்றுக்கும் ஏற்ற அடிப்படையில் நம் உடலை படைத்திருக்கிறார்” என அவர் கூறினார்.