நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30, 31 ஆகிய  தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இந்த தேதிகளில் வங்கிகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் ஜனவரி 31ம் தேதி இந்திய வங்கி அமைப்பு, ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புகொண்டதால், வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதனால் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.