திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து ‘Sri TT DEVASTHANAMS’ என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் பக்தர்கள் சாமி தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை என அனைத்தையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.