தில்லி அரசு சார்பாக விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை துவங்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது “மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் துவங்கப்படும்.

இதையடுத்து அதிக மக்கள் நடமாட்டமுள்ள இடங்கள் கண்டறியப்படும். இந்த ஸ்கூட்டர்களானது தாமாகவே இயங்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை போகும். நாங்கள் பொது போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி அதிக பேருந்துகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இப்போது இந்த இ-ஸ்கூட்டர் வசதி வாயிலாக தொலைதூர இலக்கை அடைவதில் இருக்கும் சிக்கலையும் தீர்ப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.