வயதான காலகட்டத்தில் நம்மை யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்று எதிர்பார்க்காமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் அவசியம். தற்போது அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் வருமானம் ஈட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் மாதம் 20 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்கலாம். இது ஒரு தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தால் உங்கள் முதுமை பருவம் பாதுகாப்பாக இருக்கும். கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

அதன் பின் 2009 -ஆம் ஆண்டு இந்த திட்டம் அனைத்து பிரிவினருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு நபர் ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். மற்றொரு கணக்கு வேண்டும் என்றால் அடல் பென்ஷன் யோஜனா என்னும் திட்டத்தில் வேண்டுமானால் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் 40% தொகையை ஆண்டு தொகையில் முதலீடு செய்ய வேண்டும் வருடாந்திர தொகையில் இருந்து மட்டும் ஓய்வூதியம் பெற முடியும்.

திட்டத்தின் நன்மைகள் என்ன.?

1.ரூ.1000 முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய தொடங்கலாம்.

2. 18 முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் பயன் பெற்றுக் கொள்ளலாம்.

3 . முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

ரூபாய் 20,000 பென்ஷன் வாங்குவது எப்படி..?

இந்தத் திட்டத்தில் 20 வயதில் மாதம் ஓய்வு பெறும் வரை ரூ.5.4 லட்சம் சேமித்தால் 9 முதல் 12 சதவீதம் வருமானம் கிடைக்கிறது. இதன் மூலமாக 1.5 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கும் கார்பஸில் 40 சதவீதம் ஒரு வருடமாக மாற்றப்பட்டால் இந்த தொகை ரூ.42.28 இலட்சமாக இருக்கும். அந்த வகையில் ஆண்டுக்கு 10 சதவீதம் கணக்கிடப்பட்டால் மாதம் ரூ.21,140 ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா காலகட்டத்திற்கு பின் நிறைய பேர் தங்களது வாழ்வின் மீதமுள்ள நாட்களில் மீதான அச்சம் அதிகரித்து வருகிறது. அதனால் கடைசி காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ இது போன்ற பென்ஷன் திட்டங்கள் பெரும் உதவியாக இருக்கும். இதன் மூலமாக நிலையான தொகை ஒவ்வொரு மாதம் வந்து கொண்டே இருக்கும் என்ற காரணத்தினால் யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.