தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரக்கூடிய சூர்யா, இப்போது சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். “கங்குவா” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அண்மையில் சூர்யா மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரன் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து பேசினார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் ரசிகர்களின் கேள்விக்கு தன் இணையப் பக்கத்தில் பதிலளித்து வருகிறார். அதாவது, ரசிகர் ஒருவர் சூர்யா சச்சினை சந்தித்த போட்டோவை வெளியிட்டு இதுதொடர்பாக கூறுங்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு “நாங்கள் இரண்டு பேரும் ஆரம்பத்தில் மிகவும் கூச்சமாக இருந்தோம். ஒருவரையொருவர் தொல்லை கொடுக்க விரும்பவில்லை. எனினும் இறுதியில் இருவரும் நன்றாக பேசிக் கொண்டோம்”என சச்சின் பதிவிட்டுள்ளார். இப்பதிவை தற்போது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.