1992 ல் தர்மபுரி அருகே வாசாத்தி மலை கிராமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்கள்.  அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை நடத்தியதன் அடிப்படையில் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,  அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கு தண்டனை விதம் ஒரு ஆண்டிலிருந்து பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையாக விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம்,  தற்போது அனைத்து மேல்முறையீடு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். குறிப்பாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,  அந்த தொகையில் 5 லட்சத்தை குற்றம் புரிந்தவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும் நீதிபதி வேல்முருகன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.