அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குமரேஷ் பாபுவின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சாபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது. மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.