சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த கொள்ளை முயற்சியின் போது ஆந்திராவில் உள்ள ஏடிஎம் கட்டுப்பாட்டு மையத்தில் அலாரம் அடித்தது. இது குறித்து வங்கி அதிகாரிகள் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.