சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் டிடிவி தினகரனுடன் இணைந்து ஓபிஎஸ் கோடாநாடு பங்களா கொலை கொள்ளை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து பேசிய போது இந்தப் போராட்டம் என்பது டிடிவி தினகரனும் ஓபிஎஸ்-ம் இணைந்து நடத்திய நாடகம் என்று கூறியதோடு ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் OPS என்றால் OUT of POLITICAL SCENE என்று புதிய விரிவாக்கத்தை கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசியலில் இல்லாத ஒரு தனி நபராக இருந்து கொண்டு போராட்டத்தின் மூலமாக சந்தர்ப்பவாத அரசியலை ஓபிஎஸ் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.