கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை புதுக்கோட்டையில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தபோது செய்தியாளர் ஒருவர் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக இபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது பற்றி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அண்ணாமலை “இதைப் பற்றி நான் என்ன கருத்து சொல்லுறது. அரசு இருக்கிறது, போலீஸ் இருக்கிறது யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்