சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி இடைதெருவில் திருப்பதி (58) என்பவர் வசித்து வந்தார். கடந்த 2014 -ஆம் ஆண்டு சம்பவத்தன்று திருப்பதி காலையில் பல்கலைக்கழக ராஜீவ் காந்தி சாலை அருகே உள்ள வளைவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருப்பதியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால்  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன் விசாரணைக்கு வந்தது. அதில் அரசு தரப்பு வக்கீல் ஆஜரானார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா அரசு போக்குவரத்து கழக பேருந்து டிரைவர் செல்வத்திற்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.