தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்கு மேடு கிராமம் இந்திரா காலனியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி திருமலைச்செல்வி செங்கோட்டை யூனியன் தலைவராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மோகன்ராஜை திருமலை செல்வி கண்டிப்பதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த மோகன்ராஜ் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன் ராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.