நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி முத்தோரை பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சங்கர் ஜார்கண்டை சேர்ந்த விஜய் ஆகியோர் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகின்றனர். நேற்று ஊட்டி நஞ்சநாடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் தனது சரக்கு வாகனத்தில் உருளைக்கிழங்கு பத்து மூட்டைகளை  ஏற்றி கொண்டு காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றார். அந்த வாகனத்தின் முன் பகுதியில் பைரவன், என்பவரும் வேனின் பின்னால் முருகேசன், சங்கர், விஜய் ஆகியரும் இருந்தனர்.

இந்நிலையில் ஊட்டியை நோக்கி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆனந்தன், பைரவன், முருகேசன், விஜய் ஆகிய நான்கு பேரையும் அக்கம் பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.