கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்மிடாலம் தேரிவிளை பகுதியில் தர்மசாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் தலைவர் செல்வராஜ் என்பவர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் விஜய், சுதன்ராஜ், ராபர்ட், ஜோர்தான் ஆகியோர் கோவில் வளாகத்தில் வைத்து மது குடித்துள்ளனர். அப்போது கோவில் நிர்வாகிகள் 4 பேரையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சுதன்ராஜ் அங்கிருந்த 3 நாகர் சிலைகளை சேதப்படுத்தி, குத்து விளக்கை வீசி எறிந்துள்ளார். இதனால் சுதன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.