சென்னை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலமாக பிறந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் மாணவி திடீரென காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவி மன்னார்குடி சேர்ந்த ஒரு வாலிபருடன் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதனால் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் மாணவரிடம் தவறாக நடக்கவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து மாணவியிடம் விசாரித்த போது தாயின் இரண்டாவது கணவரான வினோத் கடந்த 7 ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் வீட்டில் இருக்க பிடிக்காமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு தான் காதலித்த வாலிபருடன் சென்றதாக மாணவி தெரிவித்தார். அந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.