திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது கூட்டணி முறித்துக் கொண்டது கூட காவேரி பிரச்சனைக்கோ,  நீட் தேர்வுக்கோ,  தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்கோ கிடையாது.  எதார்த்த உண்மை என்னவென்றால் ? பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவிக்கும் தைரியம் அந்த அடிமைகளுக்கு கிடையாது. அவர்கள் இப்போது செய்வதும் வெறும் நாடகம் மட்டும்தான்.

கூட்டணி முறிவு  என்று சொல்வதற்கு இரண்டு நாளைக்கு முன்னாடியே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் டெல்லிக்கு போய்ட்டு வந்தாங்க. அது எப்படின்னா…  யாருக்குமே தெரியாம….  டெல்லியில் போய் பாஜக தலைவரை சந்தித்து வந்தாங்க…. திருட்டு தனமா போயிட்டு வந்தாங்க…. சென்னையில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானம் இருக்கு. ஆனால் எப்படி தெரியுமா போனாங்க.

இரண்டு முன்னாள் அமைச்சர்கள் இங்கிருந்து கொச்சினுக்கு போய்…  அங்கிருந்து டெல்லிக்கு.  இந்த பக்கம் 2 முன்னாள் அமைச்சர் இங்க இருந்து பெங்களூரு போய்,  அங்க இருந்து டெல்லிக்கு… ஏனென்றால் யாருக்கும் தெரியக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு அடிமைகள் கூட்டம் தான் இங்கே இருந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்ல,  அதிமுகவின் முன்னணி தலைவர்கள் அனைவரும் அதே கருத்து தான், இப்போது சொல்வார்கள்…  நாம் ஏமாறுவோம் என்று நினைக்கிறார்கள். தயவுசெய்து தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.