செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், பட்டியலின மக்களை எல்லாம் குறிவைத்து… இளம்  அப்பாவிகளை கொலை செய்வதை  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. எங்களுக்குள் எந்த ஜாதி வேற்றுமையும் கிடையாது. இணக்கமாக அனைத்து ஜாதி சமுதாய மக்களோடு நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இதை ஜாதி துவேசமாக ஒரு சில கட்சிகள் எண்ணுகிறது. அந்த  கட்சிகள் எல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டும். இங்கு  முன்விரோதமும் கிடையாது, ஜாதி வேற்றுமையும் கிடையாது,  அதனால் ஏற்படுகின்ற சண்டையும் கிடையாது. அந்த கொலைகளுக்கு காரணமே இல்லாமல் அப்பாவிகள் கொலை செய்யப்படுகிறார்கள். இதை காவல்துறை தான் கண்டிக்க வேண்டும்,  கண்டுபிடிக்க வேண்டும்.

இதை கண்டித்து நவம்பர் 20ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றோம். தென் மாவட்டங்களில் பதட்டமான சூழலை ஏற்படாமல் இருக்க அனைத்து ஜாதி சமுதாய தலைவர்களையும் அழைத்து மத நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு நான் ஏற்பாடு செய்ய இருக்கிறேன்.   தேதிகள் பின்னால் அறிவிக்கப்படும். கூடிய விரைவில் தென் தமிழகத்தில்….  குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். இது கூடிய விரைவில் அறிவிக்கப்படும்  தெரிவித்தார்.