தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெகந்திராபாத் பகுதியில் ஆசிப் நகர் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் விஷால் (24) என்பவர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவர் மொரட்பள்ளி பகுதியில் உள்ள ஜிம்மில் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார். அதன்படி நேற்று வழக்கம்போல் இரவு 8 மணி அளவில் விஷால் உடற்பயிற்சி செய்வதற்காக ஜிம்முக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக விஷாலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு விஷாலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அதாவது உடற்பயிற்சி செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விஷால் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/ArbaazTheGreat1/status/1628879039544053761?s=20 ‌