உத்திர பிரதேச மாநிலம், படோஹி மாவட்டத்தில், காட்டுப்பகுதியில் இரும்பு பெட்டியில் அடைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமியின் சடலம்  கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன.

உபேந்திரா என்ற இளைஞர் அச்சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமி வேறு ஒரு இளைஞனுடன் நெருங்கி பழகுவதை ஏற்க முடியாமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் இரும்புப் பெட்டியில் சடலத்தை அடைத்து பைக்கில் எடுத்துச் சென்று வீசியுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.