திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெசிந்தா கலந்து கொண்டார். இந்நிலையில் ஏராளமான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.