திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பள்ளிவாசல் தெருவில் மைதீன்(70) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு முத்துப்பேட்டை சாலை வழியாக  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  மைதீன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கொருக்கையை சேர்ந்த திருமுருகன், கண்ணன் ஆகியோரும் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மைதீன் மகன் முத்தலீப் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.