நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற 3-ம் தேதி இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் தேர் திருவிழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன் தலைமையில் வேதாரண்யம் துறை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளனர். இதில் தேர் செல்லும் நான்கு வீதிகளிலும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின் கோவில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் தேர் திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.