திருமண விழாக்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பது புதிதல்ல, ஆனால் சில சமயங்களில் அவை நகைச்சுவையாக மாறி, பல ஆண்டுகள் நினைவில் நிற்கின்றன. அப்படி ஒரு வேடிக்கையான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெண்மணி மணமக்களுக்கு ஆசி வழங்கிவிட்டு மேடையில் இருந்து இறங்கும்போது, திடீரென தடுமாறி முகம் குப்புற விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர், இது ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று, பார்ப்பவர்களை சிரிப்பு கடலில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், பச்சை நிற புடவையில் அழகாக தோன்றும் அந்த பெண்மணி, முழு நம்பிக்கையுடன் மேடையில் ஏறி, மணமக்களுக்கு மனமார்ந்த ஆசிர்வாதம் வழங்குகிறார். ஆனால், இறங்கும்போது தான் கதையில் ட்விஸ்ட். படியில் கால் வைத்தவுடன், அவரது பேலன்ஸ் தவறி, வேகமாக முகம் குப்புற விழுந்துவிடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Mohit Kashyap (@iiiimohit)

அவர் விழுந்த வேகத்தை பார்த்து, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் உதவிக்கு ஓட, சிலர் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினர். “யாரும் சிரிக்க மாட்டாங்க, ஆனா உங்க சிரிப்பை அடக்கவே முடியாது!” என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்ய, இந்த சம்பவம் சிரிப்பு மட்டுமல்ல, ஒரு புரிதலையும் தருகிறது – ஒரு கண நேர கவனக்குறைவு எப்படி எல்லாம் மாற்றிவிடும். இனி மேடையில் இருந்து இறங்கும்போது, எல்லோரும் கொஞ்சம் கவனமாக இருப்பார்கள் என நம்புவோம்.