ஹிமாச்சல் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள ஆனி பகுதியில், செவ்வாய்க்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டடம் முற்றிலும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இந்த கட்டடம் காலியாக இருந்ததாகவும், இது 2023-ஆம் ஆண்டு நிலச்சரிவில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்கு அருகில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரமான இடிபாட்டின் காட்சிகள் வீடியோவாக பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சில நாட்களாக, ஹிமாச்சல் பிரதேசத்தில் தொடர்ந்து பலத்த மழை, மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால், மாநிலத்தில் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
An under-construction building collapsed due to heavy #Landslide in Anni area of #Kullu. This structure was located near the buildings that had collapsed due to landslides in 2023, and it had been lying vacant since then. No casualties has been reported yet. pic.twitter.com/piVpauvVRR
— Nikhil Choudhary (@NikhilCh_) September 2, 2025
