இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி நியூசிலாந்து அணியை நம்ப வேண்டியுள்ளது. தற்போது இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடிக் கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் 5-வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 90 ஓவர்களில் 250 ரன்கள் அடிக்க வேண்டும்.

நாளை இந்த இலக்கை நியூசிலாந்து அணி எட்டிவிட்டால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை இலங்கை அணி வெற்றி பெற்றாலோ அல்லது போட்டி டிராவில் முடிந்தாலோ 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவுக்காக இந்திய அணி காத்திருக்க வேண்டும். மேலும் இதனால் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் முடிவை இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.