அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியில் இரட்டை அடுக்கு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பேருந்து மண்ஹாட்டன் பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு பேருந்து மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழு காயமடைந்த 80 பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவர்களில் 18 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். நேருக்கு நேர் மோதி கொண்ட இரண்டு பேருந்திலுமே அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இந்த கோர விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.