திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பேத்தி பூமிகாவை பராமரித்து வந்தார். இந்நிலையில் பூமிகாவும் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பவரும் காதலித்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரு ஆண்டாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் பூமிகாவுக்கும் திருச்சியை சேர்ந்த ரகு என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ரகுவின் பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி ரகுவிற்கும், பூமிக்காவுக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து பூமிகா கணவருடன் திருச்சியில் வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்ற பூமிகாவுக்கு தனது முன்னாள் காதலன் பாண்டி உயிரிழந்தது தெரியவந்தது இதனால் சோகத்தில் இருந்த பூமிகா திருச்சிக்கு வராமல் இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரகு எலி பசையை தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பூமிகா தனது காதலன் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூமிகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.