அதிமுகவினுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டமானது, அதிமுக தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் அதிமுக இனி ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை திட்டவட்டமாக தமிழக மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

வெற்றி பெற்ற பிறகு ஒரு வேளை அதிமுக பாஜக உடனான கூட்டணி அமைக்கும் என்ற ஒரு பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இருந்து வரும் நிலையில் அதற்கான முற்று  புள்ளி வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாஜகவுடன் அதிமுக இனி ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மக்களிடம் நீங்கள் தெளிவு படுத்த வேண்டும் என்று நிர்வாகியிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.