நேபாள நாட்டில் கடந்த 15ஆம் தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்கும் முயற்சித்தபோது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் இந்தியர்கள் உட்பட 72 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் விமானத்தினுடைய இரு என்ஜின்களும் பழுதடைந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியினுடைய தவறா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப காரணங்களா என்பது குறித்து அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.