தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருள் சரவணன் தயாரித்து நடித்த திரைப்படத்தில் நயன்தாராவின் நடிக்க வைப்பதற்கு முதலில் அனுகியதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தி லெஜன்ட் படத்தை விளம்பர படங்களை இயக்கும் இரட்டை இயக்குனர்களான ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தார்கள்.

இவர்கள் நயன்தாராவை ஹீரோயின் ஆக இல்லாமல் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தி லெஜண்ட் படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஜேடி ஜெர்ரி கூறியுள்ளனர். மேலும் இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நயன்தாரா பெரிய ஹீரோக்களின் படங்களில் தான் நடிப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால் நயன்தாராவின் ரசிகர்கள் நல்ல வேலையாக நீங்கள் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறி வருகிறார்கள்.