தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை “மேனேஜர் போல் இட்லி தோசை சாப்பிட்டு செல்ல இந்த பதவிக்கு வரவில்லை. 3-வது கியரில் மெதுவாக பயணிக்கும் நான் 2024 தேர்தலுக்கு முன் 5-வது கியர் வேகத்தில் பயணிக்க உள்ளேன் எனக் கூறினார். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என அதிமுகவை சாடி அதில் குறிப்பிட்டுள்ளார்.