ஆந்திரபிரதேசத்தில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் சில பேர் போலீஸ்  நிலையத்தில் புகாரளித்தனர். அதில், ஆந்திரபிரதேச முதல்-மந்திரியின் ஸ்டிக்கர் ஒன்றை நாய் கடித்து கிழித்துள்ளது. இதன் காரணமாக அந்நாயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினரிடம் முறையிடப்பட்டிருந்தது. அண்மையில் தன் அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஆந்திரபிரதேசத்தில் ஒவ்வொரு கிராமம் மற்றும் வீட்டிலும் “ஜெகன் நம்முடைய வருங்காலம்” என்ற போஸ்டரை ஒட்டும்படி உத்தரவிட்டுள்ளார்.

அதன்பின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் மந்திரிகள், எம்எல்ஏ.க்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இந்த ஸ்டிக்கர்களை வீடுகளில் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் விஜயவாடா மத்திய தொகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் சமூகஊடகத்தில் வைரலாகியதும் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் நம் முதல்-மந்திரியை அவமதிப்பு செய்த நாய்க்கு தக்கதண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்