உத்திரபிரதேசம் காஜியாபாத்தில் ஸ்கூட்டரில் போகும் போது முத்தமிட்ட ஒரு ஜோடியை கண்டித்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் என்ற இளைஞர் அந்த ஜோடியிடம் குடியிருப்பு பகுதியில் ஆபாசமாக நடந்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஜோடி தங்களது நண்பர்களை போன் செய்து அழைத்துள்ளனர்.

இதையடுத்து கற்கள் மற்றும் கம்பால் அவர்கள் தாக்கியதில் விராட் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.