தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் மற்றும் மேலவை உறுப்பினரான கவிதாவை நாளை (மார்ச் 9)ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தொழிலதிபர்கள் சிலருடன் இணைந்து எம்எல்சி கவிதா 100 கோடி ரூபாய் அளவிற்கு சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் சொல்லப்படுகிறது. டெல்லி அரசன் புதிய கலால் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணை தற்போது தெலுங்கானா அரசியலிலும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது