மும்பை கடற்கரை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கடற்படையின் அந்த ஹெலிகாப்டரானது மும்பை கடற்கரை பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மாநில மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சம்பவம் எப்படி நடந்தது? என ஆராய உயர்மட்ட குழு  அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த குழுவினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.