இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டின் நிலைமை மோசமாக இருக்கிறது எனவும் நாட்டை தீயவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கூறி தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் தியானத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தியானத்தில் ஈடுபடுவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, இந்த நாட்டில் முன்னேற்றம் அடையாமல் உள்ள மருத்துவமனைகளையும் கல்வி நிலையங்களையும் மேம்படுத்தியவர்களை தீயவர்கள் என்று கூறி சிறையில் அடைத்து விட்டார்கள். இந்த நேரத்தில் நாட்டு மக்களுக்காக உழைக்க யாரும் இல்லாததை நினைத்து கவலைப்பட வேண்டும். மேலும் இந்த நேரத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக நான் தியானத்தில் ஈடுபட போகிறேன் என்று கூறியுள்ளார்.