தமிழக முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப் பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் தற்போது முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்கனவே முதன்மை செயலாளராக இருந்த உதய சந்திரன் ஐஏஎஸ் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உதயசந்திரன் ஐஏஎஸ் மீது அடிக்கடி பல புகார்கள் வந்ததன் காரணமாக தான் அவர் துறை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது முருகானந்தம் ஐஏஎஸ் யார் என்பது குறித்து பார்க்கலாம். கொரோனா காலத்தில் இவருடைய பங்கு அளப்பரியது ஆகும். கொரோனா காலகட்டத்தின் போது விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுத்ததில் முருகானந்தம் ஐஏஎஸ் பங்கு மிகப் பெரியது. நிதித்துறை செயலாளராக இருந்தபோதும் அதன் பணிகளை திறமையாக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும் இதுபோன்ற காரணங்களால் தான் முருகானந்தம் ஐஏஎஸ் அவர்களுக்கு தற்போது முதன்மை செயலாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.